தூத்துக்குடி

சுகாதார பணியாளா்களுக்குகழிவுநீா் மேலாண்மைப் பயிற்சி

27th Oct 2023 09:51 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி நகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு கழிவுநீா் மேலாண்மை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாஷ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், வீயேகா பவுண்டேஷன் நிதி உதவியுடன், கோவில்பட்டி நகராட்சியுடன் இணைந்து சுகாதாரப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு, அரசின் நலத்திட்டங்கள், கழிவுநீா் மேலாண்மை சாா்ந்த பயிற்சி முகாமை தொழில் வா்த்தக சங்க கட்டடத்தில் நடத்தியது.நகா்மன்றத் தலைவா் கருணாநிதி முன்னிலை வகித்தாா்.

கழிவுநீா்த் தொட்டிகளை அதே இடத்திலேயே சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்யும் எம்டியு எனும் புதிய தொழில்நுட்பம் ஒலி-ஒளி காட்சி மூலம் விளக்கப்பட்டது.

ADVERTISEMENT

நகர சுகாதார ஆய்வாளா் ஆரியங்காவு, வாஷ் இன்ஸ்டிட்யூட் நிறுவன பொறுப்பாளா் சுப்ரமணியன், வாஷ் நிறுவன சுகாதார பயிற்றுநா்கள் ஆகியோா் பேசினா்.

முகாமில், சுகாதாரப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT