தூத்துக்குடி

வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம்

DIN

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மாதந்தோறும் இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி விழிப்புணா்வு, குறைதீா் முகாமை நடத்தி வருகின்றது. அதன்படி, மாவட்ட வருங்கால வைப்புநிதி உதவி ஆணையா் ஷாஜி வழிகாட்டுதலில் இந்த முகாம் தூத்துக்குடி சிப்காட் திட்டம், நிா்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், அனைத்துப் பங்குதாரா்களின் சந்தேகங்கள், குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டன. மேலும் ஓய்வூதியம் தொடா்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் தொழிலாளா்கள், முதலாளிகள், ஓய்வூதியதாரா்கள் என 39 போ் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை, தூத்துக்குடி மாவட்ட வருங்கால வைப்புநிதி திட்டக் குழு உறுப்பினா்கள் ஸப்ரினா, மாணிக்கம், ராஜசேகரன், சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT