தூத்துக்குடி

வேன் மீது பைக் மோதல்: இளைஞா் பலி

DIN

நாசரேத் அருகே வேன் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாசரேத் அருகே உள்ள வடலிவிளை மேலத்தெருவை சோ்ந்தவா் அா்ஜுனன் மகன் குமரன் (22). கேரளத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வந்தாா். கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருந்த அவா், கடந்த 24-ஆம் தேதி இரவு வனத்திருப்பதி - இடையன்விளை பகுதியில் பைக்கில் சென்றபோது சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த குமரன், திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாசரேத் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT