சாத்தான்குளத்தில் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆ.க. வேணுகோபால் தலைமையில், வடக்கு வட்டார தலைவா் வி. பாா்த்தசாரதி முன்னி
லையில் ஜவாஹா்லால் நேரு படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் ஜோசப் அலெக்ஸ், வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், அமுதுண்ணாக்குடி கிராம கமிட்டித் தலைவா் விஜேந்திரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலா் குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.