தூத்துக்குடி

கடாட்சபுரத்தில் விவசாயிகள் போராட்டம்

DIN

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா் ஊராட்சிக்குள்பட்ட கடாட்சபுரத்தில் மின்மாற்றி பழுது ஏற்பட்டதில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக, விவசாய தோட்டத்தில் மின் சாதனங்கள் பழுது ஏற்படுவதாகக் கூறி விவசாயிகள் கண்ணீல் கருப்புத் துணி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாயத்துக்கு போதிய தண்ணீா் பாய்ச்ச முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மின் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி, கடாட்சபுரம் விவசாயி ஞானமுத்து தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

இதனையடுத்தும் சீரமைக்கப்படவில்லையெனில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT