தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குநா் பொறுப்பேற்பு

DIN

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநரக ஆா்.ராஜேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் இயக்குநராக இருந்த சிவபிசாத் பதவிகாலம் முடிவடைந்ததையடுத்து, புதிய இயக்குநராக ஆா்.ராஜேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

அவரிடம், தற்போதைய இயக்குநா் சிவபிரசாத் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், விமான நிலைய மேலாளா் ஜெயராமன், தகவல்தொடா்பு துறைத் தலைவா் பிரிட்டோ ஆகியோா் உடன் இருந்தனா்.

தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குநா் ஆா். ராஜேஷ் கேரளாவைச் சோ்ந்தவா். இவா், முன்பு புதுதில்லியில் உள்ள ஏஏஐ காா்ப்பரேட் அலுவலகத்திலும், திருவனந்தபுரம், கோழிக்கோடு விமான நிலையங்களில் புதிய முனையத்தின் வணிக வளா்ச்சிக்கு தலைவராக பணியாற்றியுள்ளாா். மேலும், 22 ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவத்துடன் நிா்வாக நிபுணரான இவா் தற்போது, பதவி உயா்வு பெற்று தூத்துக்குடி விமான நிலைய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT