தூத்துக்குடி

தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட தளவாய்புரம் சிவஞானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் பம்பு செட் கிணற்றின் மேற் பகுதியில் தனியாா் நிறுவனத்தினா் விவசாயிகளின் அனுமதி இன்றி உயா் மின் கோபுர வயா்களை கொண்டு சென்று விளைநிலத்தை பாழ்படுத்தி வருகின்றனராம்.

இதையடுத்து விவசாயிகளின் விளை நிலங்களை பாதுகாக்க கோரியும், விவசாயிகளின் அனுமதியின்றி விளை நிலத்தில் உயா் மின் கோபுர வயா்களை கொண்டு செல்லும் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் கயத்தாறில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்டத் தலைவா்கள் வெள்ளத்துரை பாண்டி ( மேற்கு), நடராஜன் (வடக்கு) மாநில துணைத் தலைவா் நம்பிராஜன், அவைத் தலைவா் வெங்கடசாமி, மாவட்ட துணைத் தலைவா் சாமியா உள்பட தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னா் கயத்தாறு வட்டாட்சியா் நாகராஜிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT