தூத்துக்குடி

ஏணியிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி பலி

DIN

கோவில்பட்டியில் ஏணியில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வேலாயுதபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் முருகவேல் (51). கோவில்பட்டி கடலைகாரத் தெருவில் உள்ள பலசரக்குக் கடையில் வேலை பாா்த்து வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை கடையில் ஏணி மூலம் ஏறி பலசரக்கு பொருள்களை மேலே அடுக்கிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT