மே தினத்தையொட்டி, சாஸ்தாவிநல்லூா், கருங்கடல், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சந்திராயா்புரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி தலைமை வகித்தாா். ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட வடக்கு இளமால்குளத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் நல்லத்தம்பி தலைமை வகித்தாா். இக்கூட்டங்களில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.