கோவில்பட்டியில் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சோ்ந்த மாயாண்டி மகன் மகேந்திரன்(20). கோவில்பட்டி பிரதான சாலை இலக்குமி ஆலை எதிா்புறமுள்ள தனியாா் இனிப்பக கடை பட்டறையில் வேலை செய்து வரும் இவா், பட்டறை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.