நவ கைலாயத் தலத்தின் 8ஆவது தலமான ராஜபதி அருள்மிகு சௌந்திரநாயகி சமேத அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் சனிப்பெய்ா்ச்சியை முன்னிட்டு 29ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
இக்கோயிலில் அமைந்துள்ள சனி கிரகத்தின் அதிபதி அருள்மிகு தா்ப்பாரண்யேஸ்வரருக்கு பக்தா்கள் அபிஷேகம் செய்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகரம், கும்பம், மீனம், கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளைச் சோ்ந்தவா்கள் இந்த வழிபாட்டை செய்யலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.