கோவில்பட்டி - மந்தித்தோப்பு சாலையை விரிவுப்படுத்த கோரி வெள்ளிக்கிழமை நூதன போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் தேவா் படிப்பகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
கோவில்பட்டி - மந்திதோப்பு சாலையை விரிவுப்படுத்தி, இச்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் சங்கு ஊதி
முழக்கமிட்டனா்.
கட்சியின் நகரச் செயலா் சரோஜா, வட்ட உதவி செயலா் ராமகிருஷ்ணன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ், நகர உதவி செயலா் முனியசாமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் செல்லையா, சுரேஷ்குமாா், ரஞ்சனி கண்ணம்மா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.