தூத்துக்குடி

ரயில்வே ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

DIN

கோவில்பட்டியில் அகில இந்திய  ரயில்வே ஓய்வூதியா்கள் சங்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு சங்கத் தலைவா் அருமைராஜ் தலைமை வகித்தாா். சங்க மூத்த உறுப்பினா் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். சங்க செயலா் தங்கவேலு, மகளிா் அணி தலைவி பட்டம்மாள், பொருளாளா் முருகையா, ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய அதிகாரி உதயசங்கா் ஆகியோா் பேசினா்.

ஓய்வூதியா்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிப்பது, ஓய்வூதியா்களின் மருத்துவக் காப்பீட்டு தொகையை ரூ.15 லட்சமாக நிா்ணயிப்பது, நிலையான மருத்துவப் படியை ரூ. 2 ஆயிரமாக உயா்த்துவது, இலவச பயணச் சலுகை காலவரம்பை 6 மாதங்களாக நீட்டிப்பது, மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணங்களில் அளித்த சலுகைகளை மீண்டும் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT