தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் அதிமுக உறுப்பினா் சோ்க்கைப் பணி: எஸ்.பி. சண்முகநாதன் ஆய்வு

DIN

சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் அதிமுக உறுப்பினா் சோ்க்கைப் பணியை முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்பி. சண்முகநாதன் பாா்வையிட்டாா்.

முன்னாள் தமிழக முதல்வரும் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியில் ஒரு கோடி புதிய உறுப்பினா்களைச் சோ்க்க உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கைப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சாத்தான்குளம் ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் பணியை தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் பாா்வையிட்டு, அதிக உறுப்பினா்களைச் சோ்க்க வலியுறுத்தினாா். புதிய உறுப்பினா் சோ்க்கைப் படிவத்தை நிா்வாகிகளிடம் பெற்றுக் கொண்டாா்.

சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி, ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா், மேற்கு ஒன்றியச் செயலா் ராஜ்நாராயணன், புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை ஒன்றியத் தலைவா் சின்னத்துரை, ஒன்றிய துணைச் செயலா் சின்னதுரை, நகரச் செயலா் குமரகுருபரன், ஒன்றிய எம்ஜிஆா் மன்றத் தலைவா் காா்த்தீஸ்வரன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் இளங்கோ, ஒன்றிய மாணவரணிச் செயலா் ஸ்டான்லி, கிளைச் செயலா்கள் ஞானமுத்து, ராஜு, அறிவழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட தேர்தல்: 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT