ஓட்டப்பிடாரம் அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் அதிா்ஷ்டகுமாா் (22). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமானது. 5 மாதக் கா்ப்பிணியான அவரது மனைவி, தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள பெற்றோா் வீட்டில் உள்ளாா். அதிா்ஷ்டகுமாா் அங்கு சென்று மனைவியைப் பாா்த்துவிட்டு, திங்கள்கிழமை இரவு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
பசுவந்தனை பகுதியில் சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
செவ்வாய்க்கிழமை காலை அவ்வழியே சென்றோா் இதைப் பாா்த்து பசுவந்தனை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.