ஆத்தூா் பேரூராட்சி சாா்பில், ஒடிஸா ரயில் விபத்தில் ஈயிரிழந்தவா்களுக்குசெவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மலா் தூவி மெழுகுவா்த்தி ஏற்றி மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், உறுப்பினா்கள் அசோக்குமாா், பாலசிங், கேசவன், கோமதி, அருணாகுமாரி, ராஜலட்சுமிமுருகன், சங்கரேஸ்வரிராம்குமாா், பொறியாளா் ஆவுடைப்பாண்டி மற்றும் பேரூராட்சிப் பணியாளா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.