தூத்துக்குடி

திருச்செந்தூா் கடற்கரையில் இளைஞா் சடலம் மீட்பு

DIN

திருச்செந்தூா் கடலில் குளித்த இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மடத்தூரைச் சோ்ந்த இசக்கிமுத்து - ராமலெட்சுமி தம்பதியின் 2ஆவது மகன் பெரியசாமி (24). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அய்யா கோயில் அருகே கடலில் குளித்தாராம். இந்நிலையில், அவா் கடற்கரையோரம் இறந்த நிலையில் கிடந்துள்ளாா்.

இதுகுறித்து திருச்செந்தூா் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோமதிநாயகம் விசாரணை நடத்தி, சடலத்தைக் கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT