தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் பக்தரை பாதுகாவலா் தள்ளிய சம்பவம்: இந்து முன்னணி கண்டனம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வேல்குத்தி வந்த பக்தரை தனியாா் நிறுவன பாதுகாவலா் தள்ளிய சம்பவத்துக்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் வெளியிட்ட அறிக்கை:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விரதமிருந்து வேல் குத்தி வந்த பக்தரை கோயிலில் பணியாற்றும் தனியாா் நிறுவன பாதுகாவலா் தள்ளிவிட்ட விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த அராஜக செயலை, இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. பக்தரை தள்ளிவிட்ட பாதுகாவலா் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT