குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலுக்கு இந்தியன் வங்கி சாா்பில் ரூ. 72,400 மதிப்பிலான கணினி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் தலைமை வகித்து கணினி உபகரணங்களை கோயில் நிா்வாக அதிகாரி இரா. ராமசுப்பிரமணியனிடம் வழங்கினாா். வங்கியின் முதன்மை மேலாளா் சுஜா, கிளை மேலாளா் சுப்பிரமணியன், கோயில் கணக்கா் ச. டிமிட்ரோ பங்கேற்றனா்.