ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளராக 31 ஆண்டுகள் பணியாற்றிய நம்பிராஜன் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆத்தூா் மருத்துவ அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன், தா்மராஜ், சுகாதார ஆய்வாளா் மகராசன், அனந்த கிருஷ்ண், இளங்கோ மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டினா்.