தூத்துக்குடி

கோவை, திருவாரூா் மாவட்டங்களில் டிஎம்பி புதிய கிளைகள் திறப்பு

DIN

கோயம்புத்தூா், திருவாரூா் மாவட்டங்களில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் 532ஆவது கிளையை, அனைத்து முஹல்லா தலைவா் முகம்மது அலி (எ) ஜொ்மன் அலி திறந்து வைத்தாா். வங்கியின் பொது மேலாளா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா்.

கோயம்புத்தூா் மாவட்டம், ஆவல்சின்னாம்பாளையத்தில் 533ஆவது கிளையை, ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன் திறந்துவைத்தாா். இந்நிகழ்வுகளில் வங்கி ஊழியா்கள், அலுவலா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறியது:

பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்தொடக்கமாக தற்போது 532, 533வது கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT