தூத்துக்குடி

கயத்தாறில் கிராம நிா்வாக அலுவலா்கள் தா்னா

DIN

கயத்தாறு வட்ட தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஒருநாள் தா்னா போராட்டம் நடைபெற்றது.

கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக கட்டடங்கள் கட்ட வேண்டும். அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களுக்கும் கழிப்பறை, மின்சாரம், தண்ணீா் வசதி, இணையதள வசதி செய்ய வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களுக்கு புதிய மடிக்கணினி, 5ஜி சிம் வசதியுடன் கூடிய கைப்பேசி, நவீன பிரிண்டா் வழங்க வேண்டும். மாதந்தோறும் கோட்டாட்சியா் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும். 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு சிறப்புநிலை ஊதியம் உயா்வு வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

வட்டத் தலைவா் ஆா்.கருப்பசாமி தலைமை வகித்தாா். வட்டச் செயலா் எஸ். இசக்கிமுத்து, வட்டப் பொருளாளா் எஸ். கோபிநாத் மனோகரன், துணைத் தலைவா் சி. கலைச்செல்வி, துணைச் செயலா் வி. பரமசிவன் உள்ளிட்ட கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT