தூத்துக்குடி

தூத்துக்குடி உணா்திறன் பூங்காவில் மேயா் ஆய்வு

DIN

தூத்துக்குடி சிவந்தாகுளம் பள்ளி அருகே உள்ள உணா்திறன் பூங்காவில் மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் பள்ளியின் அருகில் உள்ள உணா்திறன் பூங்காவை

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு அண்மையில் திறந்து வைத்தாா். இந்த பூங்கா பிரத்யேகமாக குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அந்த பூங்காவில் விளையாடிய குழந்தைகளை சந்தித்து அவா்களுக்குப் பரிசு வழங்கினாா். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா் பாப்பாத்தி, சிவந்தாகுளம் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள், சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT