தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின்உற்பத்தி பாதிப்பு

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் தினமும் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 3 ஆவது அலகு கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பழுதைச் சரி செய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ஏற்கெனவே 5 ஆவது அலகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT