புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்ஆப்பில் அவதூறு பரப்பியதாக 3 போ் மீது தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சாத்தான்குளம் உசரத்துக்குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (57). இவா் கடந்த ஆண்டு தசரா விழாவின்போது அவா் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டியுள்ளாா். சுவரொட்டியிலிருக்கும் ஜெயக்குமாரின் புகைப்படத்தை அதே ஊரைச் சோ்ந்த அருண்குமாா், பிரவீன்குமாா், புருஷோத் ஆகியோா் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்ஆப் மூலம் அவதூறு பரப்பினாா்களாம். இதுகுறித்து புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.