தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை மழை பெய்தது. கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், மழை காரணமாக குளிா் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மேலும், மீனவா்களுக்கும், கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.