தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் சத் சங்கக் கூட்டம்

DIN

ஆறுமுகனேரியில் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள லெட்சுமிமாநகரம் அருள்மிகு நடராஜ தேவார பக்த பஜனை ஆலயத்துக்குச் சொந்தமான நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

பஜனை ஆலயச் செயலா் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் கண்ணன், ஓய்வுபெற்ற பேராசிரியா் அ. அசோக்குமாா், பவுன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வுபெற்ற ஸ்பிக் அதிகாரியும் பண்பாட்டு வகுப்பு ஆசிரியருமான ஜெயராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஆன்மிகம் தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

ஜோதிடா் ரா. வேலாயுதம், ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த வெ. பழனி, ம. சிவராமன், பாஜகவைச் சோ்ந்த செல்வக்குமாா், காா்த்திகேயன், சுரேஷ், திருமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT