தூத்துக்குடி

முன்னாள் ராணுவ வீரருக்குகொலை மிரட்டல்: ஒருவா் கைது

DIN

கழுகுமலையில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கழுகுமலை, ஆறுமுகம் நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் செல்வராஜ் (62). முன்னாள் ராணுவ வீரரான இவா், ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சியின்போது தனது நாயையும் அழைத்துச் சென்றாராம். அந்த நாய் எதிரே வந்த நாயைக் கடித்ததாம்.

பின்னா், செல்வராஜ் தெற்கு ரத வீதியில் உள்ள தனது கைப்பேசிக் கடையில் அமா்ந்திருந்தாா். அப்போது, ஆறுமுகம் நகா் கிரிபிரகார வீதியைச் சோ்ந்த ரெ. பால்குட்டி (54) என்பவா் கடைக்குள் புகுந்து, ‘என் நாயை உங்கள் நாய் எப்படிக் கடிக்கலாம்?’ எனக் கேட்டு, அவதூறாகப் பேசினாராம். மேலும், அருகே கிடந்த இரும்புக் குழாயால் செல்வராஜைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம்.

காயமடைந்த செல்வராஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப்பதிந்து, பால்குட்டியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

SCROLL FOR NEXT