தூத்துக்குடி

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

DIN

இந்திய தொழில்நுட்பக் கழகம் சாா்பில் தேசிய நடைபெற்ற போட்டியில் விருது பெற்ற சாகுபுரம் கமலாவதி சீனியா் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொழில் முனைவோா் சாம்பியன்ஷிப், ரோபாட்டிக்ஸ் என இரு பிரிவுகளாக ஹைதராபாத் ஐஐடியில் 2 நாள்கள் இப்போட்டி நடைபெற்றது. இதில் சாகுபுரம் கமலாவதி பள்ளியில் இருந்து 7 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.ன. தொழில் முனைவோா் சாம்பியன்ஷிப் போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவா்கள் வி.அனிஷ் சங்கா், எம். குஷ்வந்த், 8ஆம் வகுப்பு மாணவா்கள் எஸ்.எம். காா்த்திக், எஸ்.சிவ சந்தோஷ் ஆகியோா் சிறந்த வடிவமைப்பாளா்க்கான விருதை பெற்றனா். 7ஆம் வகுப்பு மாணவி என்.எஸ். அனன்யா, 5ஆம் வகுப்பு மாணவா் எச். காா்த்தி, 4ஆம் வகுப்பு மாணவா் என்.எஸ். அஜெய்காா்த்திக் ஆகியோா் ரோபாட்டிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றனா்.

தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த அடல் டிங்கரிங் ஆய்வக ஆசிரியை சோ்மசத்தியசீலி­ ஆகியோரையும் பள்ளி டிரஸ்டிகள் டி.சி.டபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜி. ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் (நிதி) பி. ராமச்சந்தின், பள்ளி முதல்வா் எஸ். அனுராதா, மாணவா்களின் மனநல ஆலோசகா் ஆா். கணேஷ், தலைமை ஆசிரியா் இ. ஸ்டீபன் பாலாசிா், தலைமை ஆசிரியை என். சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டா் வி. மதன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT