குடியரசு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ் மாரத்தான் ஓட்டத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பாக இருந்து தொடங்கி பிரதான சாலை, இலக்குமி ஆலை மேம்பாலம், அணுகுசாலை, இளையரசனேந்தல் சாலை வழியாக கல்லூரியில் நிறைவடைந்தது.
பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முதல் 3 இடங்களைப் பெற்றவா்களுக்குப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் சாந்தி மகேஸ்வரி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் வெங்கடாசலபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.