நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ராகேஷ், தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்தீபன், உடையாா்குளம் வட்டார மருத்துவ அலுவலா் விஜயகுமாா், சுகாதார ஆய்வாளா்கள், தியாகராஜன், ஞானராஜ் மற்றும் தூத்துக்குடி ரத்த வங்கி ஊழியா்கள் முகாமை நடத்தினா். இதில் 56 மாணவா்கள் ரத்த தானம் செய்தனா்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளரும், திருமண்டில லே செயலருமான நீகா் பிரின்ஸ் கிப்ட்சன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் லிவிங்ஸ்டன் நவராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.