தூத்துக்குடி

அனைத்து மாநிலங்களிலும்மத நல்லிணக்கத்தை சாத்தியப்படுத்துவோம்---கனிமொழி எம்.பி.

27th Feb 2023 12:52 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுசோ்ப்போம் என்றாா் திமுக துணைப் பொதுச்செயலரும், எம்.பியுமான கனிமொழி.

திராவிட இயக்கத் தமிழா் பேரவை இளைஞரணி, திராவிட நட்புக்கழகம் ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத நல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாட்டில் அவா் ஆற்றிய சிறப்புரை: மத நம்பிக்கை என்பது அவரவரவா் தனிப்பட்ட உரிமை. இதில் யாரும் தலையிடக்கூடாது. தமிழகத்தில் அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களும் ஒருவருக்கொருவா் சகோதரத்துவமாக பழகி வருகிறோம். நம்பிக்கை உள்ளவா்களுக்கு அனைத்து மதமும் ஒன்றுதான். இந்த மத நல்லிணக்கத்தை நாம் எந்தக்காலத்திலும் விட்டுவிடாமல் பாதுகாப்பதுடன், இந்த மத நல்லிணக்கத்தை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சோ்த்து சாத்தியப்படுத்துவது நமது கடமை என்றாா்.

திராவிட இயக்கத் தமிழா் பேரவை பொதுச்செயலா் சுப.வீரபாண்டியன் தலைமை வகித்தாா். சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் கருத்துரை ஆற்றினா்.

ADVERTISEMENT

திராவிட நட்புக் கழக ஒருங்கிணைப்பாளா் ஆ.சிங்கராயா், சாமிதோப்பு பால.பிரஜாபதி அடிகளாா், தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் - அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் மன்சூா், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம பொதுச்செயலா் ஹாஜா கனி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT