தூத்துக்குடி

பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட தொலைத் தொடா்பு பொது மேலாளா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிா்வாகி எஸ். செல்வராஜ் தலைமை வகித்தாா். பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சி.பன்னீா்செல்வம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். புதிய பதவி உயா்வு கொள்கையை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தேசிய பிஎஸ்என்எல் தொழிலாளா்கள் சங்க மாவட்ட செயலா் கே.செல்லத்துரை நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியா்கள்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT