தூத்துக்குடி

ஈரோடு கிழக்கு: 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும்

DIN

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வேட்பாளா் இளங்கோவனை ஆதரித்து 37 ஆவது வாா்டுக்குள்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் வீதிகள்தோறும் நடந்து சென்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் திமுக சாா்பில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றுள்ளனா். திமுக கூட்டணியினா் வாக்கு சேகரிக்கச் செல்லும் பகுதிகளில் மக்கள் முகமலா்ச்சியுடன் வரவேற்பு அளிப்பதே இதற்கு சாட்சி. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா் அவா்.

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, முக்காணி தொடக்க கூட்டுறவு சங்கத் தலைவா் உமரிசங்கா், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சுதாகா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT