தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவலா் உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

DIN

தூத்துக்குடி தருவை மைதானத்தில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் இரண்டாம் நிலைக் காவல் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை கடந்த ஆண்டு நவம்பா் 27-இல் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தியது. இதில் தோ்ச்சி பெற்ற 931 விண்ணப்பதாரா்களுக்கான உடல்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக, 400 போ் அழைக்கப்பட்டிருந்தனா்.

ரயில்வே டிஐஜி பி. விஜயகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆகியோா் உடல் தகுதித் தோ்வை பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (பிப்.7) 350 போ், புதன்கிழமை (பிப்.8) 181 போ் தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் மேற்பாா்வையில், 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 11 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட போலீஸாா் மற்றும் காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் இத் தோ்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT