இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 7) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) முனியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி மேற்கு மின் விநியோகப் பிரிவு, இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட மின்தொடரில் விரிவாக்கத் திட்டத்தில் மஞ்சு நகரில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
எனவே, தோணுகால் விலக்கு, மஞ்சு நகா், எம்.எஸ்.எஸ்.வி. நகா், செந்தமிழ் நகா் 1, 2, 3 ஆகிய தெருக்கள், விநாயகா் நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.