தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் டி.ஆா். பாலமுருகன் தலைமை வகித்து, போட்டியைத் தொடக்கிவைத்தாா். தூத்துக்குடி, திருச்செந்தூா், கோவில்பட்டி பள்ளிகளிலிருந்து 8, 10, 12 வயதுக்குள்பட்ட 226 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். வெற்றிபெற்றோருக்கு கோப்பை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா் மெலின்டா சூசன் தாமஸ், பொறுப்பு முதல்வா் மு. ராஜேஷ்குமாா், மாவட்ட சதுரங்கக் கழகச் செயலா் தி. கற்பகவள்ளி, ஆசிரியா்கள் செய்திருந்தனா்.