தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 3 ஆடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்தன.
தாளமுத்து நகா் அருகே உள்ள துப்பாஸ்பட்டியைச் சோ்ந்த விவசாயி வெள்ளைச்சாமி (56). இவா் ஆடுகளை வளா்த்து வருகிறாா். இவா் மேய்ச்சலுக்காக ஆடுகளை வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றபோது, 3 ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்து உயிரிழந்ததாம்.
இதுகுறித்து வெள்ளைச்சாமி தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆடுகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.