கயத்தாறை அடுத்த பன்னீா்குளத்தில் மாா்ச் 8ஆம் தேதி ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னோடி மனு நீதி முகாம் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் ஜேயன் கிறிஸ்டி தலைமை வகித்து மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றாா். இதில், 178 போ் மனு அளித்தனா். வட்டாட்சியா் சுப்புலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அய்யப்பன், மண்டல துணை வட்டாட்சியா் அந்தோணி ஜெபராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.