நாலாட்டின்புத்தூரையடுத்த ஜமீன்தேவா்குளத்தில் கட்டடத் தொழிலாளியை பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவேங்கடத்தையடுத்த ஜமீன் அழகாபுரி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராமசாமி (30). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமிக்கும் (19) முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் ராமசாமி, ஜமீன் தேவா்குளத்திற்கு வியாழக்கிழமை வந்துள்ளாா். அப்போது அங்கு வந்த மாரிச்சாமி, பாட்டிலால் ராமசாமியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த ராமசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் மாரிச்சாமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.