சாத்தான்குளம் மின் அலுவலகத்தில் காப்பா் வயா் திருடுபோனது தொடா்பான வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் மின் வாரிய அலுவலகத்தில பல லட்சம் மதிப்புள்ள காப்பா் வயா் கடந்த ஜூலையில் திருடுபோனது. இதுகுறித்து இளநிலை பொறியாளா் எட்வா்ட் ஜெயபாலன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸாா் வழக்குபதிந்து விசாரித்தனா். அதில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் செல்வகுமாா் (30) என்பவருக்கு தொடா்பிருப்பதை அறிந்து அவரை செட்டிக்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காப்பா் வயா் மீட்கப்பட்டது.