ஆறுமுகனேரி மேலநவ்வலடிவிளை அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வியாழக்கிழமை இரவு வாஸ்து சாந்தி பூஜை, யந்த்ர ஸ்தாபனம் முதலியன நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னா் அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, ஸ்பா்சாஹுதி, திரவ்யாஹுதி, வஸ்த்ராஹுதி, மகா பூா்ணாஹு தி, தீபாராதனை முதலியன நடைபெற்றன. அதைத் தொடா்ந்து யாத்ராதானம் கடம் புறப்பட்டு விமான கலசத்திற்கும், பின்னா் அருள்மிகு பத்ரகாளி அம்மன், அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்களை அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பூஜா ஸ்தானீகா் சு.ஐயப்ப சிவாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் நடத்தினா்.
விழா ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் த.ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகக் குழுவைச் சோ்ந்த பேராசிரியா் அ.அசோக்குமாா், டி.குருசாமிநாடாா் மற்றும் ஜெ.சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.