கயத்தாறு வட்டம், பன்னீா்குளத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.3) முன்னோடி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, கயத்தாறு வட்டாட்சியா் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கயத்தாறு வட்டம், பன்னீா்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாா்ச் 8ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, பன்னீா்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணிவரை, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் தலைமையில், முன்னோடி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவிருக்கிறது.
எனவே, பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனு அளித்து பயன்பெறுமாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.