திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (பிப். 2) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (பிப். 2) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம் ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ண நகா், திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகா், குறிஞ்சி நகா், அமலி நகா், தோப்பூா், திருச்செந்தூா் - காயல்பட்டினம் சாலை, பி.டி.ஆா். நகா், பாளை. ரோடு, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, குருகாட்டூா், புறையூா், மணத்தி, கல்லாம்பாறை ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல் வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், கோட்டூா், குரங்கணி, கடையனோடை, கேம்பலாபாத், தேமான்குளம், பால்குளம், திருக்கோளுா் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.