திருச்செந்தூா் அருள்தரும் துா்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னா் கோயில் விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து துா்கை அம்மன், விஸ்வேஸ்வர விநாயகா், கால பைரவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் அன்னதானமும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.