சிங்கப்பூரில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்செந்தூா் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவா்கள் தங்கப் பதக்கம் வென்றனா். இவா்களுக்கு திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
சா்வதேச அளவிலான சிலம்பப் போட்டி, சிங்கப்பூா் செயின்ட் ஜாா்ஜ் அவென்யூவில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூா், மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 180 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், திருச்செந்தூா் ஆலன் திலக் கராத்தே பள்ளியைச் சோ்ந்த மாணவி மதுமிதா (12) இரட்டை கம்பு சுற்றும் பிரிவில் முதல் பரிசும், மாணவா் சிவகுமாா் (14) ஒற்றை கம்பு சுற்றும் பிரிவில் முதல் பரிசும் வென்று தங்கப் பதக்கம் பெற்றனா்.
தொடா்ந்து திங்கள்கிழமை காலை திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் மாணவா், மாணவியை உறவினா்கள் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.