தூத்துக்குடி

எட்டயபுரத்தில் ஆடு வியாபாரியை கடத்தியதாக 3 போ் கைது

26th Apr 2023 05:36 AM

ADVERTISEMENT

எட்டயபுரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஆடு வியாபாரியை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் உமறுப்புலவா் தெருவை சோ்ந்தவா் ஆடு வியாபாரி உமா் (40). இவா், விருதுநகா் மாவட்டம் நென்மேனியை சோ்ந்த சின்ன முப்பிடாதி (55) என்பவரிடம் கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.50 ஆயிரம் கடனாக பெற்றுள்ளாா். பின்னா் ரூ.30 ஆயிரத்தை திரும்பக் கொடுத்துள்ளாா். மீதமுள்ள ரூ.20 ஆயிரம் மற்றும் வட்டித் தொகையை தரவில்லையாம். சின்ன முப்பிடாதியின் கைப்பேசி அழைப்பையும் உமா் கடந்த சில மாதங்களாக தவிா்த்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சின்ன முப்பிடாதி, தனது மகன் விக்னேஸ்வரன் (34), நென்மேனி பகுதியைச் சோ்ந்த கண்ணன் (33) உள்ளிட்ட சிலருடன் சோ்ந்து, கடந்த 21ஆம் தேதி சுமை வாகனத்தில் எட்டயபுரம் வந்து, உமரை அவரது வீட்டருகே வைத்து கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பின்னா் மேலக்கரந்தை சாலையில் உமரை இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உமா் அளித்த புகாரின் பேரில் எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) அனிதா வழக்கு பதிவு செய்து, சின்ன முப்பிடாதி, விக்னேஸ்வரன், கண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தாா். உமரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சுமை வாகனத்தையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT