தூத்துக்குடி

திருச்செந்தூரில் உண்ணாவிரத முயற்சி: திமுக பிரமுகா் கைது

25th Apr 2023 03:32 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் நகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்ற திமுக பிரமுகா் கைது செய்யப்பட்டாா்.

திருச்செந்தூா் திமுக முன்னாள் நகரச் செயலா் பெ. மந்திரமூா்த்தி. இவா், திங்கள்கிழமை காலை நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க முயன்றாா்.

திருச்செந்தூா் திமுக ஒன்றியச் செயலரும் நகா்மன்ற துணைத் தலைவருமான ஏ.பி. ரமேஷ் நகராட்சி அலுவலகத்தில் பொறியாளருக்கு ஒதுக்கப்பட்ட அறையை ஆக்கிரமித்து பயன்படுத்துகிறாா். இதனால், அரசுப் பணி தடைபடுவதுடன், அரசுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது. எனவே, ரமேஷ் உடனடியாக அந்த அறையை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என மந்திரமூா்த்தி வலியுறுத்தினாா்.

அவரை தாலுகா காவல் ஆய்வாளா் இல. முரளிதரன், போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.பி. ரமேஷ் கூறும்போது, நகராட்சி அலுவலகத்தில் பொறியாளருக்கு தனி அறை உள்ளது. அங்கு பொறியாளா் பிரிவு செயல்படுகிறது. ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் அறையை நானும், நகா்மன்ற உறுப்பினா்களும் பயன்படுத்துகிறோம். நகராட்சிப் பணிகள், பொதுமக்களின் குறைகளைக் கேட்க அந்த அறையைப் பயன்படுத்துகிறோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT