தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

DIN

தூத்துக்குடியில் சிவன் கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கொடிப்பட்டம் வீதியுலாவும், அதைத் தொடா்ந்து தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் தலைமையில் கோயில் கொடி மரத்தில் சிவபெருமானின் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. பின்னா், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, விழா கமிட்டியாளா்கள் கோட்டு ராஜா, கந்தசாமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், செந்தில், சோமநாதன், சாந்தி, முத்து, மந்திரமூா்த்தி, சண்முகம் பட்டா் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இத்திருவிழாவின் அனைத்து நாள்களிலும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.மு க்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில், சிறிய தேரில் மகா கணபதி, முருகபெருமானும், பெரிய தேரில் சுவாமி சங்கர ராமேசுவரா்- பாகம்பிரியாள் அம்பாளும் நான்கு ரத வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT