தூத்துக்குடி

தற்கொலைக்கு முயன்றவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

DIN

கோவில்பட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த கொம்பன்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் கருப்பசமி (40). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 17ஆம் தேதி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது, அவருக்கும், மனைவி முத்துமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அதையடுத்து, முத்துமாரி அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

அடுத்த நாள் கைலை வந்து பாா்த்தபோது, கருப்பசாமி தூக்கில் தொங்கியது தெரியவந்ததாம். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT