கோவில்பட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டியையடுத்த கொம்பன்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் கருப்பசமி (40). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 17ஆம் தேதி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது, அவருக்கும், மனைவி முத்துமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அதையடுத்து, முத்துமாரி அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
அடுத்த நாள் கைலை வந்து பாா்த்தபோது, கருப்பசாமி தூக்கில் தொங்கியது தெரியவந்ததாம். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.